Tamil News
Tamil News
Friday, 14 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழ் உள்பட 15 மொழிகளில் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார். 

பல்வேறு கட்சிகள் கண்டனம்

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF) தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் நடந்த பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ச்சியாக கோரிக்கைகளையும், கண்டனங்களையும், தெரிவித்து வருகின்றன. 

தமிழ் உட்பட 15 மொழிகளில் தேர்வு

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் வரும் 2024 ஜனவரி 1-ந்தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளதாகவும், இந்த தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இதற்கிடையே வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி சி.ஏ.பி.எப் தேர்வை தமிழில் நடத்த வலியுறுத்தி திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.