Tamil News
Tamil News
Friday, 21 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

மத்திய பிரதேச மாணவர்

சென்னை ஐஐடி - ல் பி.டெக் 2 ஆம் ஆண்டு படித்து வரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர் கல்லூரி வளாகத்திற்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் சென்னை ஐஐடி வளாகத்தில்  4 தற்கொலை சம்பங்கள் நிகழ்ந்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிகரித்து வரும் மாணவர்கள் தற்கொலை

இந்த சம்பவத்தை அறிந்து கல்லூரிக்கு சென்ற காவல்துறையினர் இறந்த மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தற்கொலைக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல சென்னை ஐஐடியில் பி,ஹெச்டி பயிலும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இம்மாத தொடக்கத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி வேளச்சேரியில் உள்ள தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்  சென்னை ஐஐடியில் மட்டும் இதுவரை 12 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்திருப்பது பலரையும் வேதனையடைய வைத்துள்ளது.