Tamil News
Tamil News
Wednesday, 26 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா

இந்தியாவில் கோலாகலமாக நடந்து வரும் 15 வது ஐபிஎல் திருவிழாவானது பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெற உள்ள 37 வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த சீசனில் தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட  சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது. நூலிழையில் சென்னை அணி வெற்றியை நழுவவிட்ட நிலையில் அடுத்ததடுத்த போட்டியில் விஸ்வரூபமெடுத்து சிறப்பாக விளையாடி வருகிறது. தனது அதிரடி ஆட்டத்தால் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தில் நீடிக்கிறது. 

பழிதீர்க்குமா சென்னை அணி?

சென்னை அணியை பொறுத்தவரை அனைத்து வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நிலையில், பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகியுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை ருதுராஜ், ஜான்வே, ரஹானே, ஆகியோர் அனைத்து ஆட்டங்களிலும் நிலையான பங்களிப்பை அளித்து வருகின்றனர். குறிப்பாக ரஹானேவின் ஆட்டம் களத்தில் அனல் பறக்கும் வகையில் அமைந்து வருகிறது. எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்துவதிலே தான் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் கவனம் செலுத்துவார்கள். அதேபோல் டோனியில் அனுபவம் மற்றும் கேப்டஷிப் அணிக்கு பெரிய பலமாக இருந்து வருகிறது. சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து அதே நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது. 

விஸ்வருபமெடுத்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் 

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இந்த ஐபிஎல் சீசனில் வலுவான அணியாக வலம் வருகிறது. கடைசியாக நடந்த 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசுர பலத்துடன் களமிறங்க உள்ளது. குறிப்பாக அந்த அணியின் யஷஷ்வி ஜெய்ஸ்வால், பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அதேபோல மற்ற வீரர்களும் அவ்வப்போது தேவையான பங்களிப்பை அளித்து வருகின்றனர். பந்து வீச்சில் அந்த அணி யுஸ்வேந்திர சாஹலையே அதிகம் நம்பியுள்ளது. நடப்பு தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாஹல் அதிக விக்கெடுகள் வீழ்த்தியவர்களில் 5 வது இடத்தில் உள்ளார். அத்துடன் சொந்த ஊரான ஜெய்ப்பூரில் விளையாடுவது ராஜஸ்தான் அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. 


இரு வலுவான அணிகளும் இன்று மோதுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்த போட்டி இரு அணி ரசிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.