பாஜக மாவட்ட துணை தலைவர்
திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவருரான ஜெய கர்ணா என்பவர் இளம் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் பேசிய முகமது அஸ்ரப் என்ற மர்ம நபர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அந்த மர்ப நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறையூர் காவல்நிலையத்தில் ஜெய கர்ணா நேற்று இரவு புகார் மனு அளித்தார்.
கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொள் என மிரட்டல்
இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த ஜெய கர்ணா சம்பந்தப்பட்ட மர்ம நபர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தார்.அதனைத் தொடர்ந்து இதனையடுத்து செய்தியாளர்களிடம் ஜெய கர்ண பேசியதாவது; இரவு நேரத்தில் என்னை தொடர்பு கொண்ட மர்ம நபர் என்னை கொலை செய்ய போகிறேன். எனவே உனது கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொள். எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி
இதனையடுத்து ஜெய கர்ணாவின் மனுவை பெற்றுக்கொண்ட மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆணையர் சத்திய பிரியா சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.