Tamil News
Tamil News
Tuesday, 02 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

தருமபுரியில் பாமக மற்றும் திமுகவிலிருந்து விலகிய 60 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் மடதஹல்லி திமுக கிளை பொருளாளர் வெற்றிவேல் மற்றும், தருமபுரி  ஒன்றியத்திற்குட்பட்ட பச்சனம்பட்டி பாமக ஒன்றிய தொண்டர் அணி தலைவர் மணி ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது புதிதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி அதிமுகவின் துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதேபோல், ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தீவட்டிப்பட்டி ஊராட்சி, நைனாகாடு திமுக கிளை கழக செயலாளர் குமார் தலைமையில் மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோரும் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர், இவர்களுடன் ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணி இருந்தார்.