Tamil News
Tamil News
Saturday, 13 May 2023 00:00 am
Tamil News

Tamil News

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.  சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் செவிலியர்களை பெருமைபடுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவமனை முதல்வர் நேரு தலைமையில் உலக செவிலியர் தின விழா கேக் வெட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தியை ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் ராஜ், மருத்துவமனை தலைமை செவிலியர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.