Tamil News
Tamil News
Friday, 12 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

பாஜகவை பந்தாடிய காங்கிரஸ்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுவரை அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் காங்கில் 114 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது. முழுமையான முடிவுகள் வெளியாகும் நிலையில், காங்கிரஸின் இடங்கள் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. எனவே இந்த முறை காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸுக்கு வாழ்த்து சொன்ன மோடி

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களின் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி


அதைத் தொடர்ந்து மேலும், பாஜகவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்,  இந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பாஜக நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டுவதாகக் கூறியுள்ளார். கர்நாடகாக மாநில நலனுக்காக தொடர்ந்து சேவை எய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.