Tamil News
Tamil News
Friday, 19 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்

தமிழகத்தில் ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறுவப்படுவதை கண்காணிக்க கோரி பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறுவப்படுவதை வங்கிகள் கண்காணிக்க மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்த கோரி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், "நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சியாக ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செப்டம்பர் 30-ந் தேதி வரை அரசு திரும்ப பெறும் என தெரிவித்துள்ளது.

திமுகவினரை நிதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்

இதனை நாடு முழுவதும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏனெனில் இது சாமானிய மக்களின் நலனுக்கானது. திமுக அரசியல் வாதிகள் பணமோசடிக்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பதில் பெயர் பெற்றவர்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகனும் ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர் என்பதை தமிழக அரசின் மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில், திமுக அரசியல்வாதிகள் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் முறைகேடாக சம்பாதித்த ரூ.2,000-ஐ மாற்றுவார்கள். எனவே இதனை நிதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்"‌ என‌ அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.