Tamil News
Tamil News
Sunday, 21 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

தியாகிகளுக்கு வீரவணக்கம்

திருச்சியில்  இன்று மக்கள் அதிகாரம் அமைப்பு தலைமையில் பொதுநல அமைப்புகள் பங்கேற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயர்நீர்த்த தியாகிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர்  செழியன் தலைமை தாங்கினார்.அதில் தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி தியாகிகள் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். 

படுகொலை செய்த போலீசாருக்கு தண்டனை

மேலும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும். தியாகிகளை படுகொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முழக்கமாக வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பொதுநல அமைப்புகள் சார்பாக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர்  சின்னத்துரை மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர்  ஜீவா, மைய கலை குழு பொறுப்பாளர் லதா, மற்றும் மக்கள் அதிகாரம் நிர்வாகக் குழு உறுப்பினர்  நிர்மலா சங்கர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.