Tamil News
Tamil News
Tuesday, 23 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் உள்ள பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியலை  திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர்  இரவிச்சந்திரன் முன்னிலையில், கோயில்  மேலாளர் தமிழ்செல்வி ,உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , மீனாட்சி, உதவி கண்காணிப்பாளர்கள் மோகன் , அண்ணாதுரை , பழனிச்சாமி , ஆய்வாளர்கள் மங்கையர் செல்வி ,பாஸ்கரன் , பானுமதி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது. 

காணிக்கையாக வந்த ரூ.66.05 லட்சம் ரொக்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று  மாதாந்திர உண்டியல்கள்  திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூபாய் 66,05,011, தங்கம் -201 கிராம் , வெள்ளி - 1452 கிராம் மற்றும் 241 அயல் நாட்டு ரூபாய் நோட்டுகளும் வரப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.