Tamil News
Tamil News
Friday, 26 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் திருச்சி மண்டலம் சாா்பில், மாவட்ட ஆட்சியரகம் அருகே உண்ணாவிரதப்  போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பண பலன்களை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத் தலைவா்கள். வளன் அரசு,  ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் துணைத் தலைவா் ஜெய ராஜராஜேஸ்வரன்  உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தாா்.  இதில், திருச்சி, அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களை சோ்ந்த நிா்வாகிகள், அரசு ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.