Tamil News
Tamil News
Wednesday, 31 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

ங்கத்தை உடலில் மறைத்து கடத்தியவர்கள்

மலேசியா மற்றும் துபாயில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்துவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த 3 பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உடலில் தங்கத்தை  மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.  இதனையடுத்து அவர்களிடம் இருந்த  1197.5 கிராம் எடையுள்ள 72 லட்சத்து 73 ஆயிரத்து 781 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அதிகாரிகள் தொடர் விசாரண

பிடிபட்ட இரண்டு பயணிகள் ஒருவர் கோலாலம்பூரில் இருந்தும் ஒருவர் துபாயில் இருந்தும் கொழும்பு வழியாக திருச்சி வந்தவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிடிபட்ட மூன்று பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிற்ன்றனர்.