Tamil News
Tamil News
Monday, 05 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

மல்யுத்த வீரங்கணைளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோாியும்,போராடி வரும் மல்யுத்த வீரங்கணைகள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை கண்டித்தும் திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகே நடந்த இப்போராட்டத்தில் ஐக்கிய விவசாய சங்க  மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூாியன் தலைமையிலும், ஒருங்கிணைப்பு குழு முன்னணி தலைவா்கள், நடராஜன்,செழியன்,சம்சுதின் ரவிகுமாா் ,சைனி,ஆகியோா் முன்னிலையில் பெருந்திரள் கண்டன ஆா்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.  இந்த ஆா்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைவா்கள், மாதா், இளைஞா், மாணவா் அமைப்புகள்,பொதுநல அமைப்புகளின் முன்னணி தலைவா்கள் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.