Tamil News
Tamil News
Sunday, 18 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

பண மோசடி

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி - இவரது கணவர் செல்வகுமார். அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், இதே போல் சமூக ஆர்வலர் என்ற பெயரில் வலம் வரும் பெட்டிசன் காமராஜ் என்பவரிடம் 5.75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளாதாகவும் கூறப்படுகிறது. 

தீக்குளிக்க முயன்ற பெண்

இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமலா சாந்தி மன்னனை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடியிருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.