Tamil News
Tamil News
Friday, 30 Jun 2023 12:30 pm
Tamil News

Tamil News

பிரமாண்ட நாடாளுமன்றம்

பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்த நாடாளுமன்ற கட்டிடம் அண்மையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மணிப்பூர், விலைவாசி பிரச்சனையை எழுப்ப திட்டம் 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 20ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ந்தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனவே இந்த கூட்டத்தொடர் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.