Tamil News
Tamil News
Thursday, 06 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

திடீரென வெடித்த பாய்லர்

திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் குளத்தின் பின்புறம் சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் டெக்ஸ்டைல் ப்ராசஸ் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறத்ஹு. இந்த தொழிற்சாலையில் பனியன் துணிகளுக்கு சாயம் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது, தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் டையிங் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீ பற்றியது.

பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு

அருகில் இருந்த டையிங் தொழிலாளர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்,தீயானது மள மள என பரவியதை அடுத்து உடனடியாக திருப்பூர் தெற்கு தியணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்,இன்று இப்பகுதியில் மின்சார தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மங்களம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 
திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியில் சாய தொழிற்சாலையில் பாய்லர் பிடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.