Tamil News
Tamil News
Thursday, 06 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

டீ குடிக்கும் நேரத்தில் வாகனம் திருட்டு 

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பாலு என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், நண்பரை பார்ப்பதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த தேநீர் கடையில் நண்பருடன் தேநீர் அருந்தி முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவரது நண்பருடன் இணைந்து பாலு, இருசக்கர வாகனத்தை தேடி பார்த்துள்ளார். அப்போது சரிபார்ப்பு பட்டறையில் அவரது வாகனம் நின்று கொண்டிருந்ததை கண்டு விசாரித்துள்ளார். 

கோயிலில் பூஜை செய்த திருடன் 

அப்போது,  சேலம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா  என்பவர் வாகனத்தை திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்தை திருடிய ராஜா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து ராஜாவிடம் விசாரணை நடத்தியபோது, வாகனத்தை திருடியதுடன், வாகனத்தின் பிரேக்கை கடையில் கொடுத்து சரி செய்ததும் தெரியவந்தது. மேலும், இருசக்கர வாகனத்தை திருடியது மட்டுமில்லாமல் திருடிய உடனே நேரடியாக கோவிலுக்கு எடுத்து சென்று,  எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்து சொந்த வாகனம்போல், ஓட்டி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. வாகனத்தை திருடியச் ராஜா மதுபோதையில் இருந்ததுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெற்றியில் விபூதி பட்டையுடன் ராஜா பக்தியுடன் காட்சியளித்துள்ளார். மேலும் ராஜா ஏஎதேனும் இரு சக்கர வானத்தை திருடியுள்ளாரா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.