Tamil News
Tamil News
Sunday, 16 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

கைது செய்யப்பட்ட அமைச்சர் 

கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறி அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இருதைய அறுவை சிகிச்சை நடைபெற்றது. 

குடும்பத்தினர் சாமி தரிசனம்

அவர்மீது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பெற வேண்டி அவரது தந்தை - தாய் மற்றும் மனைவி ஆகியோர் திருச்சி திருவெறும்பூர் - துவாக்குடி அருகே உள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான இடர்களை களையும் திருநெடுங்களநாதர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். திருநெடுங்களநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபட்ட பின் பிரகாரத்தில் உள்ள வராகி அம்மனையும், ஏனைய பரிவார தெய்வங்களையும் வணங்கி சென்றனர்.