Tamil News
Tamil News
Friday, 28 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 2வது நாளாக அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல்.விவசாயிகளை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.54 ஒரு டன் கரும்புக்கு ரூ.8,100 வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.