Tamil News
Tamil News
Sunday, 30 Jul 2023 12:30 pm
Tamil News

Tamil News

பாஜக நிர்வாகி வீட்டில் புகுந்த மர்ம நபர் 

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதி பா.ஜ.க கிழக்கு ஒன்றிய மண்டலதலைவராக இருந்து வருபவர் பாலசுப்பிரமணியம். இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இன்று வீடு திரும்பிய நிலையில் அவரது வீட்டுகண்ணாடி மற்றும் வீட்டு உபயோகபொருட்கள் உடைகபட்டு இருந்தது. அத்துடன் அவரது வீட்டில் இருந்த பிரதமர் மோடியின் படமும் உடைக்கபட்டு இருப்பதைகண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அவரது வீட்டில் இருந்த சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்தார்.   

மோடி படத்தை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி

அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர்பொருட்களை சேதப்படுத்துவதும் பிரதமர் மோடியின் படத்தை சேதப்படுத்துவதும் பதிவாகியிருந்தது. இது குறித்து பா.ஜ க நிர்வாகிகளுடன் சென்று உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப்பெற்றுகொண்ட் உடுமலை காவல்துறையினர் சி.சி.டி.வி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.