Tamil News
Tamil News
Monday, 07 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

காத்திருப்பு போராட்டம் 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையில் விவசாயிகள் விவசாயிகளின்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து 12  நாட்களாக நடைபெற்று வருகிறது.

அரை நிர்வாணத்துடன் முக்காடு அணிந்து போராட்டம்

12-ம் நாளான இன்று மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் ஏமாற்றிவிட்டது என்பதை வலியுறுத்தும் விதமாகஅரைநிர்வாணத்துடன் (கோவனதுடன்) தலையில் பச்சைவண்ண முக்காடு அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய அய்யாக்கண்ணு, எங்களது போராட்டத்திற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற்ற நிலையில் தற்போது அனுமதி மறுத்துள்ளதாகவும், இருந்த போதிலும் தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.