Tamil News
Tamil News
Thursday, 10 Aug 2023 12:30 pm
Tamil News

Tamil News

சிறுமியை மிரட்டி கடத்திய கும்பல் 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அச்சிறுமி கடந்த 5 ஆம் தேதி நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் சிறுமியை மிரட்டியுள்ளனர். அப்போது காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி சிறுமியை இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்றுள்ளனர். பின்னர்  காளிவேலம்பட்டி அருகே ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்று அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது . 

பாலியல் கொடுமையை புகைப்படம் எடுத்த கும்பல் 

பின்னர் அந்த சிறுமியை மூன்று பேரும் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளதாகவும், இதை வெளியே கூறினால் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனிடையே காட்டுப்பகுதியில் இருந்து வீட்டிற்கு தப்பி வந்த சிறுமி தனது தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்  பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மூவர் கைது

இதனிடையே சிறுமியை கூட்டு பாலியல்  பலாத்காரம் செய்த பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஜான்சன்(26), மற்றும் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த  பார்த்தீபன்(26) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட  மேலும் ஒருவரை  அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர். இதில், கடந்த 5 ஆம் தேதி பார்த்திபன் மற்றும் ரமேஷ் குமார் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி செய்து சிறைக்கு சென்றது  குறிப்பிடத்தக்கது.