Tamil News
Tamil News
Thursday, 17 Nov 2022 00:00 am
Tamil News

Tamil News

இந்தியா - நியுஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நாளை (18-11-2022) நியுஸிலாந்தில் உள்ள வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்குகிறது. 

டி20 உலகோப்பை தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியுஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் பட்டாளம் களமிறங்கவுள்ளது. 

அதைப்போல நியுஸிலாந்து அணியும், டி20 உலகப் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே இந்த இரு அணிகளும் வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் களமிறங்கும் என்பதால் ரசிகர்களின் கண்களுக்கு நாளைய போட்டி விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்திய நேரப்படி நாளை நண்பகல் 12 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. 

இந்திய அணியில், ஷேரயாஸ் ஐயர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷான், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், புவனேஷ் குமார், ஹர்ஷல் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுவேந்திர சாஹல் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். 

நவம்பர் 18 முதல் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் இந்திய அணியை கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.