நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப்படமானது தெலுங்கை தொடர்ந்து கர்நாடகாவில் வெளியாவதிலும் சிக்கல் உருவாகியுள்ளது.
நடிகர்கள் விஜய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், சூரி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தை பொங்கலுக்கு தமிழகத்தில் வெளியிட அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் டப் செய்து வெளியிட வேலைகள் நடைபெற்று வந்தது. ஆனால் பெரிய விழாக்களின் போது நேரடி தெலுங்கு படங்களே வெளியிடப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கூறியதால், வாரிசு படத்தை சங்கராந்தியன்று தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த இயக்குநர் சீமான், நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதிலும் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது வாரிசு திரைப்படத்தின் நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னட திரைப்படமான கிரிக் பார்டி படத்தின் மூலமே 2016ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய திரைப்படங்கள் கன்னடத்தில் ராஷ்மிகா மந்தனாவை பிரபலமான நடிகையாக மாற்றியது.
மேலும் கீதா கோவிந்தம், புஷ்பா படங்களில் நடத்ததின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக உருவெடுத்தார் ராஷ்மிகா மந்தனார். அவருடைய சம்பளம் உயர்ந்தது போல ரசிகர்களின் பட்டாளமும் பல மடங்கு உயர்ந்தது.
இதனிடையே தனது முதல் படமான கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்த ரக்ஷித் ரெட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் ராஷ்மிகாவின் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் அவர் திருமண முடிவில் இருந்து விலகினார்.
இந்நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகா மந்தனா பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், அவரிடம் கிரிக் பார்டி திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ரக்ஷித் ஷெட்டியின் பெயரை சொல்லாமல் பூசி முழுகி பதில் அளித்துள்ளார். இது கன்னட ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் தற்போது தமிழ் மற்றும் இந்தி படங்களில் இருந்து வாய்ப்புகள் வருவதால் அதற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்துவருவதாகவும், சினிமாவில் அவரை வளர்த்துவிட்ட கன்னட திரையுலகை மறந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பலர் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.
News from Karnataka that Kannada Theatre Owners, Organizations and Film Industry will soon going to take an action on #RashmikaMandanna !!!
— Daily Culture (@DailyCultureYT) November 24, 2022
They may go to the extent banning @iamRashmika's films permanently from #Karnataka
Worrying thing for #PushpaTheRule and #Varisu Teams
மேலும் கன்னட திரைத்துறை ராஷ்மிகா மந்தனாவிற்கு தடை விதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள புஷ்பா-2 மற்றும் வாரிசு திரைப்படடங்கள் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் இப்பொழுது கர்நாடகாவிலும் சிக்கல் எழுந்துவிடும் என்ற அச்சத்தில் வாரிசு படக்குழுவினர் இருப்பதாக கூறப்படுகிறது.