Tamil News
Tamil News
Monday, 05 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் 

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம் மறைந்து ஓராண்டுகளுக்கு மேலாகிறது. துரை மகாலிங்கத்தின் 55 வயதான மகள் பாரதி தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார். பாரதியின் கணவர் ராஜ்குமார், காட்பாடி பகுதியில் ஓட்டல் அதிபராக இருக்கிறார். 

அண்ணன் மகள் தற்கொலை

இந்நிலையில், துரைமுருகனின் அண்ணன் மகளான பாரதி திடீரெனதற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இவர் நேற்று முன்தினம் (டிச. 4) வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி அருகே பாரதி ரயிலில் அடிபட்டு சடலமாக மீட்கப்பட்டார்.  இவரது உடலை மீட்ட ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக  அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
காவல் துறை விசாரணையில் பாரதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.