Tamil News
Tamil News
Wednesday, 07 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதி சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதேபோல், கரைக்காலுக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இப்ப்புயலானது நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்ககும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதிக கனமழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 

8 மாவட்டங்களுக்கு விடுமுறை 

இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேடை, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 9) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.