Tamil News
Tamil News
Tuesday, 13 Dec 2022 13:50 pm
Tamil News

Tamil News

நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், அரசியலுக்கு நுழைந்ததோடு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பொறுபேற்றார். 

நன்றிக்கெட்ட செயலாயிடும்..

திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் செலவுக்கு எம்.ஜி.ஆருக்கு உதவும் விதமாக அவரை சந்தித்து பணத்தைக் கொடுத்தார் சின்னப்பா தேவர்.

"அண்ணே, இந்தப் பணத்தை நீங்களே வச்சுக்கங்க. தேவையான பணம் எனக்கு கிடைச்சிடுச்சு. கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் ஒரு தொகை கொடுத்தார். ஜேப்பியார் ஒரு தொகை கொடுத்தார். எனக்கு நெருக்கமான சிலரும் பணம் கொடுத்திருக்காங்க. இப்போது இந்தப் பணம் தேவைப் படாதுண்ணே" என எம்.ஜி.ஆர். தேவர் குடுத்த பணத்தை வாங்க மறுத்தார்.

"அவங்கள்லாம் உங்களுக்கு தேர்தல் செலவுக்கு உதவும்போது, நான் உங்களுக்குச் செய்யலேன்னா நன்றிகெட்ட செயலாயிடும். கண்டிப்பா இந்த பணத்தை ஏத்துக்கணும்" எனச் சொல்லி பணத்தை கொடுத்தார் தேவர். 

ஒவ்வொரு நாளும் பூஜையறையில் ‘முருகா எப்படி யாவது நீ ஜனங்க மனசுல புகுந்து, எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப் போட வை. நான் உன் உண்டியல்ல நோட்டப் போடுறேன்’ என தினமும் பூஜை செய்து வந்தார் தேவர்.

எம்.ஜி.ஆர் சொன்ன ரகசியம்

இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு வெற்றி கிடைத்ததும், மருதமலை சென்ற தேவர், உண்டியலில் நோட்டுக் கட்டுகளைப் போட்டுவிட்டு, முருகனுக்கு நன்றி சொல்லி அபிஷேகமும் செய்துவிட்டு பிரசாதத்துடன் சென்னை திரும்பினார்.
முதல் வேலையாக எம்.ஜி.ஆரைப் பார்த்து "நீங்க ஜெயிக்கணும்னு முருகனை வேண்டிக்கிட்டேன். அவனும் ஜெயிக்க வச்சிட்டான்" எனச் சொல்லி பிரசாதத்தைக் கொடுத்தார் தேவர். 

அதை வாங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர். தேவரை தனியறைக்கு அழைத்துச் சென்று தேவரிடம் ஒரு ரகசியத்தை சொன்னார். 
"அண்ணே, ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்டச் சொல்றேன்ணே. மக்கள் என்மேல அபரிமிதமான நம்பிக்கை வச்சிருக்காங்க. மக்களுக்கு, குறிப்பா ஏழைகளுக்கு நல்லதச் செய்யணும்னு நான் சினிமா மூலம் சொல்றதையெல்லாம் மக்கள் நம்புறாங்க. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தா நல்லது செய்வாருனு நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மக்களுக்கு, அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு நான் ஏதாவது செஞ்சாகணும். அப்பதான் என்னை நம்பின மக்களை நான் ஏமாத்தியதாக இருக்காது. இதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

தனியாக நான் ஒரு கட்சியைத் தொடங்கினால்தான் மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும்கிற அரசியல் ஆசையை ரகசியமா என்னோட மனசுல வளர்த்துக்கிட்டு வந்தேன்.
 
இருந்தாலும் முழுமையா வந்தா, மக்கள் முழுமையா ஆதரிப்பாங்களா?  மேலும் உறுதி செய்துக்கிறதுக்காக ஒரு முடிவெடுத்தேன். 

பயந்துப்போன எம்.ஜி.ஆர்

அந்த முடிவு என்னன்னா, தெலுங்கில் என்.டி.ஆர். நடிச்சு பெரிய வெற்றிபெற்ற ஒரு படத்த பார்த்தேன். அது அரசியல் கதை. என்.டி.ஆர். நகராட்சி தேர்தல்ல ஜெயிச்சு தலைவராகிற கதை. அந்தக் கதையை வாங்கி நானே  நடிக்க  முடிவெடுத்து நாகிரெட்டியாரை சந்திச்சு, என் விருப்பத்தைச் சொன்னேன். 

அந்தப் படத்தை நீங்களே எடுங்கனு ரெட்டியார் சொன்னார். ஆனா நீங்க எடுத்தாத்தான் சரியாவரும்'னு நான் சொன்னேன். அதுக்கும்  ரெட்டியார் சம்மதிச்சார்.

நம் நாடு பட ரிலீஸ் அன்னிக்கு, ரெட்டியாரே நாம ரெண்டுபேரும் மட்டும் மேகலா தியேட்டருக்குப் போய் ஈவ்னிங் ஷோ பார்ப்போம். நாம தியேட்டருக்கு வர்ற விஷயம் மேனேஜருக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்'னு சொன்னேன். 

திட்டமிட்டபடி படம் ஆரம்பிச்ச பிறகு நானும், ரெட்டியாரும் உள்ள போனோம். அரங்கத்தின் கதவுக்கு பக்கத்துல நானும், ரெட்டியாரும் நின்னுக்கிட்டு படம் பார்த்தோம்.

நகராட்சி தேர்தலில் நான் ஜெயிச்சுட்டு  வரும் காட்சியில் 'வாங்கய்யா வாத்யாரய்யா' பாட்ட  ஜெயலலிதா பாட ஆரம்பிச்சதும் கரகோஷம், விசில், கைதட்டல், ஆரவாரம்னு தியேட்டரே இடிந்து விழுமோ என்கிற அளவுக்கு மக்கள் அமர்க்களப்படுத்தினாங்க. கரகோஷம் நிற்கவே இல்லை. 

அந்த சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும் போல் இருந்தது.

அன்னிக்கு தான் என் மேல உயிரையே வச்சிருக்க இந்த மக்களுக்கு என் உயிரையே அர்ப்பணிக்கிறதுனு முடிவு பண்ணினேன். 
அப்போது நான் ரெட்டியாரைக் கட்டிபிடிச்சு, ரெட்டியாரே நான் ஜெயிச்சிட்டேன்னு சொல்லி கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன்.

ரெட்டியார் என்னை அணைத்து தட்டிக்கொடுத்து வெளியே ஆழசிட்டு போனாரு.நம் நாடு படம் எனக்குக் கொடுத்த ஊக்கத்தால் நான் முழு நேர அரசியலுக்கு வர முடிவு செஞ்சேன். 

அன்னைக்கு,  மக்கள் கொடுத்த உற்சாகம்தான் இன்னிக்கு திண்டுக்கல் தேர்தலில் துணிந்து இறங்கினேன். ஜெயிச்சிட்டேன்
இப்படி தான் தனிக்கட்சி துவங்கியதன் காரணங்களை தேவரிடம் பகிர்ந்து இருகிறார் எம்.ஜி.ஆர்.