Tamil News
Tamil News
Tuesday, 13 Dec 2022 15:13 pm
Tamil News

Tamil News

ஏர் இந்தியா விமானத்தில் மது அருந்திய பீஸ்ட் பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ செய்த செயலால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

ஷைன் டாம் சாக்கோ

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம்வரும் ஷைன் டாம் சாக்கோ, அண்மையில் தமிழில் வெளியான தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

குடிபோதையில் அட்டகாசம்

தற்போது மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் இவர் நடிப்பில் உருவான “பாரத சர்க்கஸ்” எனும் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில் துபாய் சென்றார்.  

அப்போது விமானத்தில் திடீரென ஷைன் டாம் சாக்கோ விமானிகள் அறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த விமான ஊழியர்கள்  அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஷைன் மீது புகார் அளித்துள்ளனர். 

இன்ஸ்டாவில் பதிவிட ஆசை

தகவலறிந்த அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று, ஷைன் டாம் சாக்கோவை விமானத்தில் இருந்து கீழே இறக்கி சென்று விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது,  ”எனக்கு விமானி அறையை பார்க்கவேண்டும் என்று ஆசை இருந்ததால், அதைப்பார்த்து விட்டு என்னுடைய மொபைலில் ஒரு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும் என்று எண்ணினேன். அதனால் தான் நான் இப்படி செய்தேன்” என்று ஷைன் கூறியுள்ளார். 

எச்சரித்த அதிகாரிகள்

ஷைனுடனான விசாரணைக்கு பிறகு,  இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்ததோடு, அடுத்த விமானத்தில் அவரை அனுப்பி வைத்தனர்.