Tamil News
Tamil News
Monday, 19 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

உச்சகட்ட பரபரப்பை தொட்ட போட்டி

கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா -பிரான்ஸ் அணிகள் மோதின. உலக முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை கட்டிப்போட்ட இந்த போட்டி பரபரப்பின் உச்சத்தை தொட்ட போட்டிகளில் ஒன்றாக மாறியது. அப்படிபட்ட பரபரப்பான இப்போட்டியில் அர்ஜெண்டினா 7 - 4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது. 

மெஸ்ஸிக்கு குவியும் பாராட்டு

இதனால், உலக முழுவதிலும் உள்ள அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸியின் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். கிட்டத்தட்ட மெஸ்ஸியின் கடைசி உலக கோப்பை என்று கணிக்கப்பட்ட இந்த போட்டியில் அவர் தலைமையில் அர்ஜெண்டினா கோப்பையை கைப்பற்றியதற்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதி போட்டியில் விளையாடிய பிரான்ஸ் அணி, உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் மிகச்சிறந்த ஆட்டமாக இதனை மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கும் கேப்டன் மெஸ்ஸிக்கும் வாழ்த்துக்களை கூறிய முதலமைச்சர், அர்ஜெண்டினா கோல் கீப்பர் மார்டினஸ்க்கு சிறப்பு பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.