Tamil News
Tamil News
Tuesday, 20 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

உணவிற்காக பணம் கேட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கசரகாட் பகுதி, வித்யாநகர் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட இடத்தில் இளம்பெண் ஒருவர் உணவிற்காக அருகில் இருந்தவர்களிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இளம்பெண்ணை அருகில் இருந்த காட்டிற்குள் தூக்கிச்சென்று, வலுக்கட்டாயமாக போதௌப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் அந்த பெண் கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் உள்ளாகியுள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, அங்கிருந்தவர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இவருக்கு மனநல ஆலோசனை வழங்கிய மருத்துவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவலர்கள், சினித் குமார் (வயது 30), பிரசாந்த் (வயது 43), மோக்சித் ஷெட்டி (வயது 27) ஆகியோரை கைது செய்தனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். மேலும் விசாரணை அடுத்த கட்டத்தை நெருங்கும்போது மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் கூறினர்.