Tamil News
Tamil News
Tuesday, 20 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் விழியகம்” என்ற கண் தான செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

வாரிசு 

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள “வாரிசு” திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. அதே நேரத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படமும் வெளியாகிறது.  இந்த இரண்டு திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். 

விஜய்யின் வாரிசு படத்தை பொருத்தவரை ரஞ்சிதமே, தீ, SoulOfVarisu என்று மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது. துணிவு படத்தை பொருத்தவரை ‘சில்லா சில்லா’ , காசே தான் கடவுளடா ஆகிய இரண்டு சிங்கிள்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே வாரிசு படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று வெளியான SoulOfVarisu பாடலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

வாரிசு திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 

விஜய் மக்கள் இயக்கம்

வாரிசு படம் வெளியாக இருப்பதால் அடிக்கடி விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டர்களை சந்தித்து வருகிறார் விஜய். கடந்த மாதம் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும்  பனையூரில் உள்ள அந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்திக்க விஜய் சென்று இருந்தார். விஜயை காண சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டர்களும், அவருடைய ரசிகர்களும் குவிந்திருந்தார்கள்.

இந்த சந்திப்பில் ரசிகர்களுடன் பேசி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் நடிகர் விஜய். மேலும், விஜயின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏனென்றால், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் விஜயின் இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. 

இதை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் மாதம் மாதம் நடைபெறும் என்று விஜய் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் சென்ற வாரம் இரண்டாம் கட்டமாக  ரசிகர்களை சந்தித்தார் நடிகர் விஜய்.  பனையூர் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் தொண்டர்கள் அனைவருக்கும் தடபுடலாக பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. அதேபோல இந்த சந்திப்பில் வாரிசு படத்தை வெளிமாவட்டங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்க என்னென்ன விளம்பர யுக்திகளை செயல்படுத்த வேண்டும் போன்ற முக்கிய ஆலோசனைகள் நடந்ததாக தகவல்கள் வெளியானது. 

தளபதி விஜய் விழியகம்

இந்த நிலையில், . தற்போது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் விழியகம்” என்ற கண் தான செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், இயக்க பொதுச்செயலாளர் இச்செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.