Tamil News
Tamil News
Wednesday, 21 Dec 2022 11:30 am
Tamil News

Tamil News

'மயோசிட்டிஸ்' நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா மருத்துவர்களின் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக தென் கொரியாவிற்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

சமந்தா 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, கடைசியாக யசோதா திரைப்படத்தில் நடித்திருந்தார். 

சமந்தா சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் அவர் பல கடினமான சூழ்நிலைகளையும் அனுபவித்து கடந்து வந்துகொண்டு இருக்கிறார்.  கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது காதல் கணவரை விவாகரத்து செய்யும் சூழல் அவருக்கு உருவானது. விவாகரத்துக்கு பிறகு சமந்தா மீதே பலரும் குற்றம் சாட்டி வந்தனர், ஆனாலும் மனம் தளராத சமந்தா  தனது வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி வந்தார். அதற்கு அவருக்கு கிடைத்த ஆதரவு தான் ‘ஊ அண்டாவா’ பாடல். 

'மயோசிட்டிஸ்'

அண்மையில் 'மயோசிட்டிஸ்' எனும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருவதாக சமந்தா கூறியிருந்தார்.  இந்த நோயுடன் தான் போராடுவது பற்றி சமந்தா கண்கலங்க பேட்டியொன்றில் பேசியது ரசிகர்களை மிகவும் வருத்ததிற்குள்ளாக்கியது. 

கொரியா பயணம்

இருப்பினும் தான் இந்த நோயிலிருந்து மீண்டு வருவேன் என நம்பிக்கையோடு இருக்கும் சமந்தா, மருத்துவர்களின் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக தென் கொரியாவிற்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியானது. 

சமந்தாவிற்கு 'பேமிலி மேன் 2' வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்துள்ளது.  ஆனால் தற்போது உடல்நிலை காரணமாக சமந்தாவால் மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால், படத்தின் பணிகள் தன்னால் தாமதமாகக்கூடாது என்பதற்காக சமந்தா தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.