Tamil News
Tamil News
Wednesday, 28 Dec 2022 00:00 am
Tamil News

Tamil News

கால்பந்து உலகின் முடிசூடா மன்னன்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக மகுடம் சூடியது. இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். 1986-ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா உச்சிமுகர்ந்த முதல் உலகக் கோப்பை இது என்பதால் கொண்டாட்டம் களைகட்டியது. அத்துடன் கால்பந்து உலகின் நட்சத்திர நாயகனான அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி முதல்முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்திய போது ரசிகர்கல் ஆனந்தத்தில் பரவசமடைந்தனர். 


தோனியின் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மெஸ்ஸி

மெஸ்ஸியின் வெற்றியை உலகமே கொண்டாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு மெஸ்ஸி பரிசு ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் கையெழுத்திட்ட அர்ஜென்டீனா அணியின் ஜெர்சியை ஸிவாவுக்கு மெஸ்ஸி பரிசாக அனுப்பியுள்ளார். 

https://www.instagram.com/ziva_singh_dhoni/

ட்ரெண்ட் செய்யும் மெஸ்ஸி - தோனி ரசிகர்கள்

இது தொடர்பாக தோனியின் மகள் ஸிவாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ஜெர்சியை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், 'தந்தையை போல் பிள்ளை' எனவும் ஸிவா குறிப்பிடப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை தோனி மற்றும் மெஸ்ஸியின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.