Tamil News
Tamil News
Thursday, 12 Jan 2023 11:30 am
Tamil News

Tamil News

ஐஸ்வர்யா லெஷ்மி நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை 'இதய' குறியீடுடன் பகிர்ந்திருந்தயடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.  

ஐஸ்வர்ய லெஷ்மி

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்ய லெஷ்மி. தமிழில் 'ஆக்ஷன்' 'ஜகமே தந்திரம்' 'கார்கி' படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய இவர், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலியாகவும், கட்டா குஸ்தி திரைப்படத்தில் கீர்த்தியாகவும் இளசுகளின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். 

குறிப்பாக, பொன்னியின் செல்வனில் 'பூங்குழலி' கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமியின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களைப் பெருமளவு கவர்ந்தது என்றே சொல்லலாம். கடந்த 2022 ஆம் ஆண்டு அதிக படங்கள் ரிலீஸ் ஆன நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். 2022ம் ஆண்டு இவரது 9 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. 

பாராட்டும் விமர்சகர்கள்

அண்மையில் பலரது பாராட்டுகளை பெறும் அளவிற்கு தன் நடிப்பாலும், தன் அழகாலும், தன் கதை தேர்வாலும் தனித்து தெரிந்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்ய லெஷ்மி. இவர் தன்னுடைய கதை தேர்வை இதேபோல நல்ல படங்கள் மூலம் நிரூபித்தால் இன்னும் பல ஆண்டுகள் நீடிப்பார் என்பது சினிமா விமர்சகர்களின் கருத்தாக இருந்துவருகிறது. 

அர்ஜூன் தாஸுடன் காதல்

நேற்று முன்தினம் ஐஸ்வர்யா லெஷ்மி 'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை 'இதய' குறியீடுடன் பகிர்ந்திருந்தார். 

இதனால் , இருவரின் ரசிகர்களும் 'காதலுக்கு வாழ்த்துக்கள்' என கருத்து பதிவிட்டு வந்தார்கள்.

அவர் உங்களுடையவர்

இந்நிலையில், ஐஸ்வர்யா லெஷ்மி  தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 
அதில், "நண்பர்களே எனது கடைசி பதிவு இவ்வளவு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்திக்க நேர்ந்தது, அதனால் ஒரு படத்தை கிளிக் செய்து பதிவிட்டேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். நேற்று முதல் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அனைத்து அர்ஜூன் தாஸ் ரசிகர்களுக்கு "அவர் உங்களுடையவர்" என்று பதிவிட்டுள்ளார்.