Tamil News
Tamil News
Saturday, 21 Jan 2023 00:00 am
Tamil News

Tamil News

அண்ணாமலையை கலாய்க்கும் வகையில் வீடியோ வெளியிட்ட திமுக எம்.பி. தயாநிதி மாறன்

சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை

அண்மையில் விமானத்தில் பயணம் செய்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கர்நாடக பாஜக இளைஞரணி செயலாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் விமானத்தின் அவசர கதவை திறந்ததாக செய்திகள் மற்றும் வீடியோக்கள்  வெளியாகின. மேலும் கதவை திறந்ததற்காகவும் சகபயணிகளின் நேரம் வீணடித்ததற்காகவும்  மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த அண்ணாமலை அவசரக் கதவை திறக்கவில்லை என்றும், அதை திறப்பது குறித்து விமான ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் கூறினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி வந்தது. 

அவசர கதவின் அருகில் அமர்ந்த தயாநிதி

இந்நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விமான அவசர கதவின் அருகே இருக்கையில் அமர்ந்தவாறு அவர் பேசியது; இன்று எனக்கு கிடைத்த இருக்கை அவசரக் கதவுக்கு அருகில் உள்ள இருக்கை. ஆயினும் இதை நான் திறக்கபோவதில்லை. அவ்வாறு திறந்தால் மன்னிப்பு கடிதம் எழுத வேண்டும். அதுமட்டுமல்லாமல் இது பயணிகளுக்கு ஆபத்து. சுய அறிவுள்ளவர்கள் யாரும் இந்த காரியத்தை செய்யமாட்டார்கள். கதவை திறப்பதால் எனக்கும் மட்டுமல்ல அனைத்து பயணிகளின் 2 மணி நேரம் வீணாகும். இதை அனைவரும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அண்ணாமலையை கலாய்ப்பது போல், தயாநிதி மாறன் வெளியிட்ட வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.