Tamil News
Tamil News
Tuesday, 28 Feb 2023 11:30 am
Tamil News

Tamil News

தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த Z+ பாதுகாப்பு மும்பைக்கு மட்டும் வழங்கப்படவில்லை. அவர் இந்தியா மற்றும் அவர்கள் வெளிநாடு செல்லும்போது கிடைக்கும்படி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அதற்கான செலவை, அம்பானி குடும்பத்தினரிடமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவிற்குள் இருக்கும்போது, ​​மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் உள்துறை அமைச்சகம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணா முராரி மற்றும் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. அவர்கள் வெளிநாடு செல்லும்போது, ​​உள்துறை அமைச்சகம் அதை உறுதி செய்யும் என்று தெரிவித்திருந்தனர்.

அம்பானி தரப்பில் முகுல் ரோஹ்தகி ஆஜராகி முகேஷ் அம்பானிக்கும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் தொடர் அச்சுறுத்தல் இருப்பதாக மும்பை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகவும் பிரபலமானவர்கள், விஐபிகள், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பிரமுகர்களுக்கு உளவுத் துறை கொடுக்கும் தகவலின்படி மத்திய அரசு பாதுகாப்பை வழங்கி வருகிறது என்று தெரிவித்தார்

இசட் பிளஸ் பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் வெளிநாட்டிலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.