Tamil News
Tamil News
Friday, 03 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

நடிகர் மாரிமுத்து சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான முகம். குடும்பம் சார்ந்த கோபக்காரராகவோ, பாசக்காரராகவோ முக்கியமான கதாபாத்திரமாக தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் வலம் வந்தவர் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து. 

தேனி மாவ​ட்டத்தை சேர்ந்த மாரிமுத்து சினிமா கனவுடன் சென்னை வந்தார். நடிகர் ராஜ்கிரணிடம் எல்லாமே என் ராசாதான், அரண்மனை கிளி உள்ளிட்ட படங்களிலும் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இவர்.

பல்வேறு படங்களில் நடித்து வந்த மாரிமுத்து, தற்போது எதிர்நீச்சல் என்ற சின்னத்திரையில் ஆதிமுத்து குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெண்கள் பலரின் சாபத்தையும் வாங்கி கட்டிக் கொண்டார்.


 
பெண் சுதந்திரத்திற்கு எதிராக, கண்டிப்பான ஒரு கதாபாத்திரமாக அந்த சீரியலில் நடித்து வந்தார் மாரிமுத்து. அந்த நாடகத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும். திருமண வீட்டில் பெண்கள் நடனமாடுவதை கண்டித்து அவர் பேசிய வசனங்கள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், அது ஒரு கதாபாத்திரம் என்றாலும் பொதுவெளியில் அவரின் மீதான பார்வை பெண்களுக்கு எதிரானவர் என்ற கோணத்தில் திரும்பியது. அந்தநிலையில், யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த அவர் அத்தனையும் நடிப்பு தான் என விளக்கம் அளித்தார்... 

இந்தநிலையில், ட்விட்டரில் பெண் ஒருவரின் புகைப்படத்துடன் can i call you என குறிப்பிட்டு பதிவு ஒன்று இருந்தது. அதற்கு நடிகர் மாரிமுத்து பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட அக்கவுண்டில் இருந்து yes என பதிலளித்து செல்போன் நம்பரையும் பதிவிட்ட சம்பவம் இணையத்தில் வேகமாக வைரலானது. மேலும் இணையவாசிகளால் அவர் பெண்ணியம் பற்றி  பேசும் வீடியோவையும் இந்த சம்பவத்தையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 

இந்த விவகாரம் குறித்து நடிகர் மாரிமுத்துவின் மகனான அகிலன் என்பவர், அவருடைய அக்கவுண்டில் இருந்து விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, அந்த பதிவில் இருக்கும் செல்போன் நம்பர் தன்னுடைய தந்தையுடையது தான் என்றும், ஆனால் அந்த ட்விட்டர் கணக்கும், அந்த பதிவும் வேறு யாரோ திட்டமிட்டு செய்தது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

என் தந்தையின் செல்போன் நம்பர் சினிமா வட்டாரங்களில் உள்ள அனைவரும் வைத்திருக்கும் நிலையில், யாரோ ஒருவர் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் என கூறி விளக்கம் அளித்திருக்கிறார்..

இதனிடையே தனியார் யூடியூப் சேனலுக்கு மாரிமுத்து அளித்த பேட்டியில், பெண் ஒருவரிடம் என்னுடைய செல்போன் நம்பரை கொடுத்தேன். ஆனால் அவர் இந்த பெண் இல்லை என கூறியிருக்கிறார். 

சினிமாவில் நடிகனாக, இயக்குநராக இருப்பதால் என்னுடைய நம்பரை கொடுத்தேன். ஆனால் அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணுக்கு என்னுடைய நம்பரை தரவில்லை என்றும், வேண்டுமென்றே சிலர் இதுபோல் செய்திருக்கிறார்கள் என்றும் விளக்கம்  அளித்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து.