Tamil News
Tamil News
Monday, 20 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது இரண்டாவது தோல்வியை தழுவியுள்ளது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், நேற்று(மார்ச்-20) நடைபெற்ற போட்டியில் தரவரிசை  பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்  மும்பை இந்தியன்ஸ் அணியும், 2ம் இடத்தில் இருக்கும்  டெல்லி கேபிடள்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீராங்கனைகளான யஸ்டிகா பாட்டியா(1), ஹைலி மேத்யூஸ்(5), நாட் ஸ்கிவர் பிரண்ட் (0) ஆகியோர் என ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு  ஏமாற்றமளித்தனர். அதன் பிறகு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 23 ரன்கள் அடித்தார். பூஜா வஸ்ட்ராகர் 26 ரன்களும், இசி வாங் 23 ரன்கள் என  மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீராங்கனையும் பெரிய ஸ்கோர் சேர்க்கவில்லை. இதனால்  20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் வெறும் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி கேபிடள்ஸ் அணியில் மேரிஸன் கேப்,ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசென் ஆகிய மூவரும் அபாரமாக பந்துவீசிய  தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

டெல்லி பேட்டிங்

110 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆடி 15 பந்தில் 33 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் களமிறங்கிய அலைஸ் கேப்ஸி அபாரமாக ஆடி 17 பந்தில் 38 ரன்கள் விளாசினார். மெக் லானிங் 32 ரன்கள் எடுக்க டெல்லி கேபிடள்ஸ் அணி 9 ஓவர்களில் 110 என்ற  இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன. இன்றைய மகளிர் பிரீமியர் லீக் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் DY பாட்டில் மைதானத்தில் மோதுகின்றன.