Tamil News
Tamil News
Tuesday, 21 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் எதிரான கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஒருநாள் போட்டித் தொடரை வெல்லும். இதனால்  ரசிகர்கள் மத்தியில் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள  வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா சிறப்பாக விளையாடி  5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர்  விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி  அபார வெற்றி பெற்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது  சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மோதுகின்றன.

ஒருநாள் தொடரை யார் வெல்லப்போவது என்பதைத் தீர்மானிக்கும் ஆட்டமாக சென்னை போட்டி அமைந்துள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் தலை சிறந்த அணிகள் என கூறப்படும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகள் வலுவாக இருந்தாலும் முதல் இரு ஆட்டங்களிலும் இரண்டு அணி தரப்பிலும்  200 ரன்கள் கூட எடுக்கவில்லை.

இந்தத் தொடரில் இதுவரை இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சிறப்பாகப் பந்து வீசி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடத்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 26 ஓவர்களுக்குள் வெறும் 117 ரன்களுக்கு சுருண்டது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற  இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்  மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சை எதிர்கொள்வதில்  கவனம் செலுத்த வேண்டும். ஆனால் சேப்பாக்கம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியா பேட்டிங்

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில், மிட்செல் மார்ஸ் மற்றும் ட்ரேவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். முதல் 6 ஓவர்களுக்கு ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது.