Tamil News
Tamil News
Friday, 24 Mar 2023 00:00 am
Tamil News

Tamil News

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமானார். இது அஜித் ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு மோகினி என்கிற மனைவியும், அனில் குமார், அனூப் குமார் மற்றும் அஜித் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர். இவரது மனைவியுடன் திருவான்மியூரில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 3.15 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார்.  இது நடிகர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் அஜித்தின் தந்தை காலமான செய்தி அறிந்த திரைத்துறையினர், அவர்களது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர். மேலும் பலர் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று மறைந்த சுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மறைந்த சுப்பிரமணித்தின் உடல் இன்று சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இறுதி ஊர்வலத்தில் அவரது குடும்பத்தினர்கள் மட்டும் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.