Tamil News
Tamil News
Wednesday, 29 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

நரேந்திர மோடி மைதானத்தில் தொடக்கம்

ஐபிஎல் 16-வது  சீசன் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த வருடம்  ஐபிஎல் தொடர்  மார்ச் 31-ம் தேதி அதாவது (நாளை) துவங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறும். நாளை 2023 ஐபிஎல் சீசனின் முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கடந்த ஆண்டு சாம்பியன் குஜராத் டைடன்ஸ்  மோதவுள்ளது. 

பிரபலங்கள் பங்கேற்பு

போட்டி நடைபெறுவதற்கு முன், பிரமாண்டமான அளவில் துவக்க விழா நடைபெறவுள்ளது. இந்த விழா நாளை மாலை 6 மணிக்கு துவங்குவுள்ளது. இந்த விழாவில் நட்சத்திரங்களின் நடனம் மற்றும் பாடல் இடம்பெறவுள்ளது. பிரபல இந்திய நடிகைகள்  ரஷ்மிகா மந்தனா மற்றும்  தமன்னா துவக்க விழாவில் நடனமாட உள்ளனர். மேலும், பாடகர் அர்ஜித் சிங் விழாவில் பாடுவார் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.இந்த நிகழ்ச்சியில்  ஒரு லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியின் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சொந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள்

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் எந்த அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. ஆனால், இந்தாண்டில் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அணியின் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்துள்ளது.  இந்த முறை ஐபிஎல் போட்டிகள் தொலைக்காட்சியில் ஸ்டார் நிறுவனத்திலும், கூடுதலாக ஆல்-லைனில் ஜியோ சினிமா ஆப்பிலும் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.