Tamil News
Tamil News
Monday, 03 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

 சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் 50 வகையான சீர்வரிசை பொருட்களுடன் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிர்வாகிகள் படையெடுப்பு

அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் சென்னையிலிருந்து அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வருகை தந்தார். சேலம் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் உள்ள அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர்.

50 வகை சீர்வரிசை பொருட்கள்

புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் ஆடு, மாடு, பல வகைகள், காய்கறி வகைகள், கரும்பு, தென்னங்கன்று உள்ளிட்ட 50 வகையான சீர்வரிசை பொருட்களுடன் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நெடுஞ்சாலை நகர் பிரதான சாலையில் இருந்து ஊர்வலமாக வந்த நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க வந்தது அப்பகுதியில் விழாக்கோலம் பூண்டது.

இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாலகிருஷ்ண ரெட்டி, கே.சி.கருப்பண்ணன், மோகன், ராமச்சந்திரன், வீரமணி ஆகியோர் தலைமையிலும் ஏராளமான அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.