Tamil News
Tamil News
Monday, 03 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

அருணாச்சல பிரதேசத்தின் மீது உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக, 11 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்ட நிலையில் இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவை சீண்டும் சீனா

இந்தியாவின் தென்கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மீது அண்டை நாடான சீனா உரிமைக் கோரி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதோடுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக சரவதேச  எல்லைகளை மறு உருவாக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமையை மீண்டும் வலியுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அருணாச்சலப் பிரதேசத்திற்கான மூன்றாவது தொகுதி பெயர்களை சீன, திபெத்திய மற்றும் பின்யின் எழுத்துக்களில் சீனா வெளியிட்டது. இது தொடர்பான அறிக்கையை சீனா வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவானது அத்தகைய முயற்சியை நிராகரித்தது.

இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியபோது, “அத்தகைய அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். சீனா இத்தகைய முயற்சியை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இதை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்டப் பெயர்களை வழங்குவதற்கான முயற்சிகள் எதையும் மாற்றாது. என்று காட்டமாக கூறினார்.

இதற்கிடைடே, சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, அருணாச்சலப் பிரதேசத்திற்கான 11 இடங்களின் தரப்படுத்தப்பட்ட பெயர்களை வெளியிட்டது. சீனாவின் அமைச்சரவை வழங்கிய புவியியல் பெயர்கள் குறித்த விதிமுறைகளின்படி “திபெத்தின் தெற்குப் பகுதியை ஜங்னான்” என்று சீனா அழைப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புவியியல் விவரங்களையும் இணைத்துக் கொண்ட சீனா

மேலும், சீன அமைச்சகம் இரண்டு நிலப் பகுதிகள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், ஐந்து மலைச் சிகரங்கள் மற்றும் இரண்டு ஆறுகள் உள்ளிட்ட துல்லியமான புவியியல் விவரங்களையும் வழங்கியுள்ளது. இது இந்திய அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் சற்றும் குறைவதற்குள் சர்ச்சைக் குள்ளான இடங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள நிர்வாக மாவட்டங்களின் வகையையும் சீனா பட்டியலிட்டு வெளியிட்டது. 

மூன்று தொகுதிகளாக புவியியல் பெயர்கள் வெளியீடு 

இது தொடர்பாக சீனாவில் வெளி விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரப்படுத்தப்பட்ட புவியியல் பெயர்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தொகுதி மூன்றாவது தொகுதி என்றும் அருணாச்சலத்தில் உள்ள ஆறு இடங்களின் தரப்படுத்தப்பட்ட பெயர்களின் முதல் தொகுதி 2017 இல் வெளியிடப்பட்டது என்றும் மேலும் 15 இடங்களின் இரண்டாவது தொகுதி 2021 இல் வெளியிடப்பட்டது என்றும் கூறியுள்ளது.. இது இந்திய அரசியல் வாட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி

அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை மாற்றும் சீன நடவடிக்கையை இந்தியா முழுவதும் நிராகரித்த நிலையில், அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இதற்கு முன்பு இருந்தது போல இனி எப்போதும் இருக்கும் என்றும் “புதிதாக உருவாக்கப்பட்ட” பெயர்களை வழங்குவது இந்த உண்மையை மாற்றாது என்றும் இந்தியா வலியுறுத்தி கூறியுள்ளது. 


தலாய் லாமா வருகையை எதிர்த்த சீனா

கடந்த 2017 ஆம் ஆண்டு புத்தமத தலைவரான தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்த  பிறகு முதல் தொகுதி பெயர்களை சீனா அறிவித்திருந்தது. மேலும், திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமாவின் வருகையை சீனா கடுமையாக விமர்சித்தும் இருந்தது. 
அத்துடன் 1950 ஆம் ஆண்டு இமயமலைப் பகுதியை சீனா இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை அடுத்து, தலாய் லாமா திபெத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் வழியாகத் தப்பி 1959 இல் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனால் இந்தியா - சீனா இடையேயான சர்வதேச எல்லை பிரச்சனை நீண்டு கொண்டே வரும் நிலையில், இரு நாடுகளின் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.