கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான ’தயாவ்வா’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்தார். தளபதி விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த கிச்சா சுதீப்பின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
பாஜகவில் இணையும் கிச்சா
சினிமா நடிகர்கள் பலருக்கும் அரசியல் ஆர்வம் இருக்கும் என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில் கிச்சா சுதீப்பிற்கும் அந்த ஆசை துளிர்ந்துள்ளது. அதாவது இன்று பாஜகவில் கிச்சா சுதீப் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிச்சாவை சந்தித்த அரசியல் பிரபலங்கள்
ஏற்கனவே கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது.
சுதீப் நிலைப்பாடு
இந்த நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கிச்சா சுதீப், “ பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளேன். ஆனால் தேர்தலில் போட்டியிட போவதில்லை” என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் வேண்டுகோள்
கிச்சா சுதீப் அரசியலுக்கு நுழைவது குறித்து அவரது ரசிகர்கள் பலரும் இணையத்தளத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு, #WeDontWantKicchaInPolitics என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை
சுதீப் தற்போது பாஜகவில் இணைய நடிகர் சுதீப் திட்டமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுதீப் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்களை தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.