திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்த சிறுமி 

girl child accident

எதிர்பாராத விபத்து

திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி இவர்களது குழந்தை திவ்யதர்ஷினி, இவர் விஜயபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார், இந்நிலையில் பள்ளி முடிந்ததும் திவ்யதர்ஷினியை அவரது தாயார் ராஜேஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது நல்லிகவுண்டன் நகர் அருகே வந்து கொண்டிருந்த பொழுது ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சின்ன கண்ணன் என்பவர் காவல்துறை வாகனம் ஓட்டி வந்துள்ளார், அப்பொழுது ராஜேஸ்வரியின் வாகனமானது எதிர்பாராதவிதமாக காவல்துறை வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி திவ்யதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் தாய் ராஜேஸ்வரிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. 

வாகனத்தை சிறபிடித்த பொதுமக்கள்

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீர சின்ன கண்ணன் என்பவர் மது போதையில் காவல்துறை வாகனத்தை இயக்கியதாக கூறி வீர சின்ன கண்ணனை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீர சின்ன கண்ணனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.