தற்காலிக ஆசிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.!

website post (99)

அரசாணை வெளியீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வானது புதிதாக பொறுப்பேற்க்கும் தற்காலிக ஆசிரியர்களுக்கும் சேர்த்து அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 15, 000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000-ஆக ஊதிய உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.18,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.