ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியோடு வலம் வந்த பெண்.!

tupp

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையில் துப்பாக்கியோடு வலம் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது

சேலம் மாவட்டம் ஏற்காடு அசம்பூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் மூன்றரை ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்து வந்தார். நிலத்தின் பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று கடந்த 25 ஆண்டுகளாக துப்பாக்கி வைத்திருந்துள்ளார். மேலும் ஏற்காடு காவல் நிலையத்தில் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொண்டு இருந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு பழனிவேல் உயிரிழந்த நிலையில், தங்களுக்கு துப்பாக்கி பயன்படாது என்று கூறி, பழனிவேலின் மனைவி பார்வதி, மகள் சுமதி ஆகிய இருவரும் துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு ஆட்சியரிடம் ஒப்படைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வலம் வந்து கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் துப்பாக்கியை ஒப்படைக்க வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் பெண் துப்பாக்கியுடன் வலம் வந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.