மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு 

Actor Vijay

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது கடன் வாங்கி யாரும் செலவு செய்ய வேண்டாம் எனக் கூறிய விஜய், குடும்பத்தை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள், பின்னர் பொதுச் சேவைகளை செய்யுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுரை கூறியதாக செய்திகள் வெளியாகின. 

மீண்டும் நிர்வாகிகளுடன் சந்திப்பு

இந்நிலையில் இன்று மீண்டும் செங்கல்பட்டு, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்திப்பதற்காக வந்துள்ளார். கடந்த முறையைப்போல, இன்றும் ரசிகர்களுக்கு சுட சுட பிரியாணி ரெடியாகி வருவது குறிப்பிடத்தக்கது

கருப்பு உடையில் விஜய்

ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க தனது காரில் பனையூரில் வந்து இறங்கிய நடிகர் விஜய் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். காரில் இருந்து இறங்கிய விஜய், தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்துக்கொண்டே சென்றார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர்.