திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

senthil balaji

மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி

திருமணங்கள் உள்ளிட்டவிழாக்களில் மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியானது . ஒரு நாள் நடைபெறும் விழாக்களில் கூட அனுமதி பெற்று மது பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு பல்வேறு தரப்பினரும் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மறுப்பு தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திருமணம் மண்டபம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே மதுவுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், கூறிய அவர், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அணுமதி நடைமுறையில் உள்ளதாகவும், அதேபோல், பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடுகள், ஐபிஎல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.