4 வயது சிறுவன் செய்த செயலால் திகைத்து போன நடிகர் அமிதாப் பச்சன்

Amitabh

இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகனாக உள்ள 4 வயதே ஆன ஒரு சிறுவன், அவரது பங்களாவிற்கு வெளியே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த நபர்களை தாண்டி சென்று அவரது காலில் விழுந்து வணங்கிய சம்பவத்தை அமிதாப் பச்சன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சனின் ரசிகர்கள் எல்லா வயதினரிடையேயும் காணப்படுகிறார்கள். இவருடைய படங்கள் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'பூத்நாத்' போன்ற சில படங்களில் அமிதாப் பணியாற்றியுள்ளார். அமிதாப் பச்சன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவரது பங்களாவுக்கு வெளியே தனது ரசிகர்களைச் சந்திப்பார், மேலும் நடிகரைப் பார்க்க நிறைய பேர் இங்கு வருகிறார்கள்.

இந்த நிலையில், தன்னை பாதித்த சம்பவத்தை அமிதாப் பச்சன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தச் சிறுவன் நடிகர் அமிதாப் பச்சனை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். அவன் தன் கையில் வைத்திருந்த ஓவியத்தை அவரிடம் காண்பித்து ஆட்டோகிராப் வாங்கி சென்றான். அவரை காண இந்தூரிலிருந்து அந்த சிறுவன் வந்துள்ளான். இது போன்ற சம்பவங்கள் தன்னை நெகிழ வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.